×

எலி கடித்ததால் உடல் நலக்குறைவு கத்தியால் கையை அறுத்து தூத்துக்குடி நர்ஸ் தற்கொலை

தூத்துக்குடி,ஜன.21:தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோடு, பிஎஸ்என்எல் ஊழியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் குருவம்மாள் (32). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கொரோனா தொற்று பரவல் காலத்தில் இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஒப்பந்த நர்சாக பணியாற்றினார். சமீபத்தில் எலி கடித்ததால் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த குருவம்மாள், கடந்த 18ம் தேதி வீட்டில் வைத்து தனது கழுத்து மற்றும் கைகளில் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (19ம் தேதி) அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குருவம்மாளின் தாய் வசந்தி(53) அளித்த புகாரின்பேரின் தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

The post எலி கடித்ததால் உடல் நலக்குறைவு கத்தியால் கையை அறுத்து தூத்துக்குடி நர்ஸ் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Selvaraj ,Guruvammal ,Tiruchendur Road, ,BSNL ,Kilpakkam Government Hospital ,Chennai ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!