×

பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவர் உட்பட மூவர் கைது

திருக்கோவிலூர், ஜன. 21: திருக்கோவிலூர் அடுத்த தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(45). இவர் அரகண்டநல்லூரில் உள்ள தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை திருக்கோவிலூரில் இருந்து வேட்டவலம் நோக்கி சென்றபோது தேவனூர் கூட்ரோடு அருகில் அங்கு சாலையை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வீரபாண்டி பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் முகமது அஜீம் (18)அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பர்கத் என்கிற பார்த்திபன் (26) மற்றும் வீரபாண்டி பகுதியை சேர்ந்த சிறுவன்(17) ஆகிய மூவரும் நின்று கொண்டிருந்தனர்.

பின்னர் ஓட்டுனர் மோகன் பேருந்தை நிறுத்தி ஓரமாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். அதற்கு அந்த மூன்று பேரும் ஒன்று சேர்ந்து ஓட்டுநரை அசிங்கமாக திட்டி வாக்குவாதம் செய்தனர். பின்னர் பஸ்சில் பயணித்தவர்கள் ஓட்டுநரை சமாதானப்படுத்தியதால் பஸ்சை இயக்கி உள்ளார். தனியார் பஸ் வீரபாண்டி சுடுகாட்டு அருகே செல்லும்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 பேரும் பைக்கில் வந்து பேருந்தின் முன் பக்க கண்ணாடியை கல்வீசி உடைத்துள்ளனர்.

அப்போது முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியதில் பஸ்சில் பயணித்த வேட்டவலம் பகுதியை சேர்ந்த அருண் மனைவி விஜயலட்சுமி (29) அவருடைய மகள்கள் தேஜஸ்டி, இசை பிரியா ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தனியார் பஸ் ஓட்டுனர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் முஹம்மது அஜிம்,பர்கத் மற்றும் சிறுவன் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவர் உட்பட மூவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Mohan ,Devanur village ,Tirukovilur ,Arakandanallur ,Vettavalam ,Devanur Koodrod ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!