×

கலைஞர் குறித்து அவதூறு தஞ்சை இன்ஜினியர் கைது

திருவாரூர்: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசுவது போன்று எக்ஸ் வலைதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ வெளியானது. இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி நகர திமுக செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தெற்குவாடியகாட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் செந்தில்நாதன்(35) என்பது தெரியவந்தது. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான இவர், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருவதும் உறுதியானது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த செந்தில்நாதனை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

The post கலைஞர் குறித்து அவதூறு தஞ்சை இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Vairamuthu ,Chief Minister ,Karunanidhi ,X ,Tiruthurapoondi ,DMK ,RS Pandian ,Thiruthurapoondi ,
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...