×

சிறுமிக்கு பாலியல் தொல்லை டிராவல்ஸ் உரிமையாளர் போக்சோவில் கைது

முத்துப்பேட்டை: திருவாரூர் அருகே கடையில் வேலை பார்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரை சேர்ந்த 17 வயதான சிறுமி, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சிவராமன் காலனி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தபடி, ஆசாத்நகரில் உள்ள டிராவல்ஸ் கடையில் கடந்த 18ம் தேதி முதல் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சேர்ந்து 2வது நாள் நேற்று முன்தினம் மாலை உரிமையாளரின் மற்றொரு கடையான செல்கடைக்கு சென்று உரிமையாளர் தாஜுதீன் (46) என்பவரிடம் பாத்ரூம் சாவி வாங்க சென்றுள்ளார். அப்போது உரிமையாளர், கடையின் கண்ணாடி கதவை பூட்டிக்கொண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாஜுதீனை நேற்று கைது செய்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை டிராவல்ஸ் உரிமையாளர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Travels ,Bocso ,Muthuppet ,Tiruvarur ,Thanjavur ,Jambuwanodai Sivaraman Colony ,Muthuppet, Thiruvarur district ,
× RELATED ரதிமீனா டிராவல்ஸ் அலுவலகத்தில் ரெய்டு