×

நாராயன் ஜெகதீசன் 245* முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 489 ரன்

கோவை: ரயில்வேஸ் அணியுடனான ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் 245 ரன் விளாசினார்.
எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்திருந்தது (90 ஓவர்). ஜெகதீசன் 155 ரன் (254 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்), முகமது அலி 1 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். முகமது அலி 5 ரன்னில் வெளியேற, ஜெகதீசன் – கேப்டன் சாய் கிஷோர் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்தனர்.

சாய் கிஷோர் 59 ரன் (85 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கர்ண் ஷர்மா பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அபாரமாக விளையாடிய ஜெகதீசன் இரட்டை சதம் விளாசி அசத்தினார். முகமது 20, அஜித் ராம் 17, சந்தீப் வாரியர் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது (144 ஓவர்). தொடக்க வீரர் ஜெகதீசன் 245 ரன்னுடன் (402 பந்து, 25 பவுண்டரி, 4 சிக்சர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரயில்வேஸ் பந்துவீச்சில் ஆகாஷ் 3, யுவ்ராஜ் சிங், கர்ண் ஷர்மா, முகமது சைப் தலா 2, ஷிவம் சவுதாரி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ரயில்வேஸ் 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்துள்ளது. ஷிவம் சவுதாரி 16, விவேக் சிங் 11 ரன் எடுத்து சந்தீப் வாரியர் பந்துவீச்சில் வெளியேறினர். பிரதம் சிங் 76 ரன், நிஷாந்த் குஷ்வா 22 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

* நாக்பூரில் நடக்கும் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 206 ரன்னுக்கு ஆல் அவுட்டான நிலையில், விதர்பா முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்திருந்தது. நேற்று அந்த அணி வெறும் 78 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. ஜிதேஷ் ஷர்மா 28, அதர்வா 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். 2ம் நாள் முடிவில் சவுராஷ்டிரா 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்துள்ளது. கை வசம் 7 விக்கெட் இருக்க, சவுராஷ்டிரா 363 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் விதர்பா அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

* கேரளாவுக்கு எதிராக தும்பாவில் மோதும் மும்பை அணி முதல் இன்னிங்சில் 251 ரன்னுக்கு சுருண்ட நிலையில், கேரளா முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கண்ணும்மல் 56, சச்சின் பேபி 65, கேப்டன் சாம்சன் 38, விஷ்ணு 29, பிரசாத் 21 ரன் எடுத்தனர். மும்பை பந்துவீச்சில் மோஹித் அவஸ்தி 15.2 ஓவரில் 3 மெய்டன் உள்பட 57 ரன்னுக்கு 7 விக்கெட் கைப்பற்றினார். 2ம் நாள் முடிவில் மும்பை 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 105 ரன் எடுத்துள்ளது. ஜெய் பிஸ்டா 59, லால்வானி 41 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

ஓவர் 15.2
மெய்டன் 3
ரன் 57
விக்கெட் 7

The post நாராயன் ஜெகதீசன் 245* முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 489 ரன் appeared first on Dinakaran.

Tags : Narayan Jagatheesan ,Tamil Nadu ,Coimbatore ,Ranji Trophy C Division ,Railways ,SNR College ,Dinakaran ,
× RELATED வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம்...