×

ஓபிஎஸ் முடிந்து போன கதையாகிவிட்டது: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேட்டி

தூத்துக்குடி: ஓபிஎஸ் என்பது முடிந்து போன கதையாகிவிட்டதாக கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மழை வெள்ள சேதம் குறித்து சட்டசபையில் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவேன். கொடநாட்டில் அவர்களது சொந்த இடத்தில் ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதில் ஆட்சேபனை இல்லை. ஜெயலலிதாவிற்கு யார் பெருமை சேர்த்தாலும் வரவேற்போம். ஓபிஎஸ் என்பது முடிந்து போன கதையாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மிகப்பெரிய சக்தியாக உள்ளது’’ என்றார்.

The post ஓபிஎஸ் முடிந்து போன கதையாகிவிட்டது: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kadampur Raju MLA ,Former ,AIADMK ,minister ,Thoothukudi ,Thoothukudi district ,
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்