×

சீனா பள்ளியில் தீ விபத்து: 13 பேர் தீயில் கருகி பலி

பீஜிங்: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மீட்பு குழு வெளியிட்ட அறிக்கையில், ‘ஹெனானின் யான்ஷான்பு கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியில் இரவு நேரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, 13 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். மேலும் பள்ளியுடன் தொடர்புடைய ஒருவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சீனா பள்ளியில் தீ விபத்து: 13 பேர் தீயில் கருகி பலி appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Henan province ,Yanshanpu ,Henan ,
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...