×

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நில மோசடி வழக்கில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சார்பில் அடுத்தடுத்து 8 சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்பியது. ஆனால், ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு ஜனவரி 16 முதல் 20தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று முதல் மந்திரி ஹேமந்த் சோரனுக்கு கடந்த 13-ந்தேதி அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது.

அதற்கு 20ம் தேதி தனது வீட்டில் வைத்து தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பதிலளித்திருந்தார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளே, அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கிறது.

இந்நிலையில் அவரின் வீடு மற்றும் அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் மண்டல அலுவலகத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் முதல்வர் இல்லத்திற்கு வெளியே பாரிகார்டுகள் போடப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Chief Minister ,Hemant Soran ,Ranchi ,Enforcement Department ,
× RELATED அமலாக்கத்துறை கைதை எதிர்த்து...