சென்னை : சென்னையில் ஓய்வுபெற்ற டிஜிபி மகேந்திரனின் மனைவி ராணியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5,000-திருட்டு போயுள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து ரிவார்டு வந்துள்ளதாக வந்த லிங்க்-ஐ கிளிக் செய்தபோது நூதனமுறையில் ரூ.5,000 திருடு போனது. ஓய்வுபெற்ற டிஜிபி மனைவியின் வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் விசாரணை நடத்தி வருகிறது.
The post ஓய்வுபெற்ற டிஜிபி மனைவியிடம் ரூ.5,000 திருட்டு appeared first on Dinakaran.