×

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது மதிமுக!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை மதிமுக அமைத்தது. திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து பேச ஆடிட்டர் அர்ஜுனராஜ், செந்திலதிபன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கீழ்காணுமாறு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படுகிறது.

1. ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -கழக அவைத் தலைவர்
2. மு.செந்திலதிபன் -கழகப் பொருளாளர்
3. ஆவடி இரா.அந்திரிதாஸ் -அரசியல் ஆய்வு மைய செயலாளர்
4. வி.சேஷன் -தேர்தல் பணிச் செயலாளர்

மறுமலர்ச்சி திமுக சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.

1. தி.மு.இராசேந்திரன் -கழகத் துணைப் பொதுச்செயலாளர்
2. ஆ.வந்தியத்தேவன் -கழக கொள்கை விளக்க அணி செயலாளர்
3. வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் -கழக தணிக்கைக் குழு உறுப்பினர்
4. ப.த.ஆசைத்தம்பி – கழக இளைஞரணி செயலாளர்

 

The post நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது மதிமுக! appeared first on Dinakaran.

Tags : Dudumuga ,Chennai ,Auditor ,Arjunaraj ,Senthilatiban ,Dimuka Alliance ,Dimuka ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!