×

அரியலூர் அருகே மதுபோதையில் தகராறு சிஆர்பிஎப் வீரர்கள் கைது

 

தா.பழூர், ஜன.20: அரியலூர் அருகே மதுபோதையில் தகராறு செய்த சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள கோடாலி மேலத்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுகுமதி (50). இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு கோடாலி பேருந்து நிறுத்தத்தில் சுகுமதியும், அவரது சகோதரர் அறிவரசன் என்பவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆயுதகளம் கிராமத்தை சேர்ந்த 3 பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்தனர். அவர்கள் அறிவரசன் மீது மோதுவது போல் வந்தனர்.

இதை சுகுமதியும், அறிவரசனும் தட்டிக் கேட்டனர். இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் அங்கிருந்த கோடாலி கிராமத்தை சேர்ந்த கலைமணி, ராஜசேகர்,கண்ணன் ஆகியோர் தகராறு செய்தவர்களின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் அவர்களை தாக்கினர். இதில் காயமடைந்த சுகுமதி ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நேற்று தா.பழூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மிசோரம் மாநிலத்தில் சிஆர்பிஎப் பட்டாலியனில் பணியாற்றும் ஆயுதகளம், பந்தயம் கோட்டை தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (37), மகாராஷ்டிரா மாநிலத்தில் சிஆர்பிஎப் பட்டாலியனில் பணியாற்றும் கார்த்திக் (30) மற்றும் அருள்செல்வன் (37) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரியலூர் அருகே மதுபோதையில் தகராறு சிஆர்பிஎப் வீரர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : CRPF ,Ariyalur ,Tha.Pazur ,Kumar ,Kodali Meleteru ,Ariyalur District ,Sukhumathi ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி