பெரம்பலூர், ஜன.20: பெரம்பலூரில் தொழிலாளர் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி சிஐடியூ சார்பாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1982 ஜனவரி 19ம்தேதி அகில இந்திய அளவில் தொழிலாளர் இயக்கங்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் திருக்கடையூர் அருகேயுள்ள திருமெய்ஞானம் கிராமத்தில் அஞ்சான், நாகூரான், மன்னார்குடி அருகே இரட்டைப் புளி கிராமத்தில் ஞானசேகரன் ஆகியோர் பலியாயினர்.
இதனையொட்டி சிஐடியூ சார்பில் தொழிலாளர்களின் தியாகிகள் தினத்தை யொட்டி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாவட்டத் தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அகஸ்டின் விளக்க உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், கிருஷ்ணசாமி வரதராஜ், மாவட்ட குழுவினர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ் நன்றி கூறினார்.
The post பெரம்பலூரில் சிஐடியூ சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.