×

புனவாசல் அணி முதலிடம்

குளத்தூர், ஜன. 20: சூரங்குடியில் நடந்த ஆண்களுக்கான கபடி போட்டியில் புனவாசல் அணி முதலிடம் பிடித்தது. குளத்தூர் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் தைத் திருநாளை முன்னிட்டு 42ம் ஆண்டு ஆண்களுக்கான கபடி போட்டி நடந்தது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்து போட்டிகளை துவக்கிவைத்தார். தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 38 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நாக் அவுட் சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டு தொடர்ந்து பரிசுகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதலிடம் பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் அணிக்கு முதல் பரிசு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த இ.வேலாயுதபுரம் அணிக்கு ரூ.25 ஆயிரம், கோப்பை, 3வது மற்றும் 4வது இடம் பிடித்த வேம்பார் கடல்புறா, சூரங்குடி அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. திமுக விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மருதக்கனிசுப்பிரமணியன், செந்தூர்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post புனவாசல் அணி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Punavasal ,Kulathur ,Surangudi ,kabaddi ,Devendrakula Velalar ,Tai Thirunala ,
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா