×

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணத்தி மக்களுக்கு நிவாரண பொருட்கள்

நாசரேத், ஜன. 20: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணத்தி கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணத்தி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள், சமையல் எண்ணெய், போர்வை, ஆடைகள் போன்றவற்றை மணிமேகலை அமிட்டி சோசியல் சர்வீஸ் நிறுவன தலைவர் சிம்லா முத்துச்சோழன் மற்றும் வளசரவாக்கம் வுமன்ஸ் கிளப் சார்பில் வழங்கப்பட்டது. இதில் நாசரேத் பேரூராட்சி கவுன்சிலர் அதிசயமணி, அமிட்டி உறுப்பினர்கள் தமிழ்சிவா, லோகேஷ், கார்த்திக், முன்னாள் இந்திய கபடி அணி வீரர் மணத்தி கணேசன், எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணத்தி மக்களுக்கு நிவாரண பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Manathi ,Nazareth ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்