சாத்தான்குளம், ஜன.20:சாத்தான்குளத்தில் பாஜ சார்பில் மெகா கோலப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் அவர்கள் வீடுகள் முன்பு கோலமிட்டனர். சாத்தான்குளம் ஒன்றிய பாஜ சார்பில் பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் மெகா கோலப்போட்டிகள் நடந்தது. முன்னதாக பாஜ நிர்வாகிகள் வீடு வீடாக சென்று அவர்கள் வீடுகள் முன்பு கோலங்கள் வரையும்படி டோக்கன் விநியோகித்திருந்தனர். கோல மாவு மூலம் புள்ளி வைத்த கோலங்கள் வரைவும் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் 2500க்கு மேற்பட்டோர் அவர்களது வீட்டின் முன்பு பல விதமாக வண்ணங்களில் கோலமிட்டிருந்தனர். இதனை ஒன்றிய பாஜக தலைவர் சரவணன், பொதுச் செயலாளர் ராஜேஷ், ஒன்றிய சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் ஜெயசுந்தர்ராஜ் , உள்ளாட்சி பிரிவு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஒவ்வொரு வார்டுக்கு தனித்தனியாக நியமிக்கப்பட்டு ஆய்வுக்குழுவினருடன் கோலங்களை பார்வையிட்டனர். கோலங்கள் ஆய்வு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் பரிசுகள் வழங்கப்படும் என பாஜ நிர்வாகிகள் தெரிவித்தனர்.
The post சாத்தான்குளத்தில் மெகா கோலப்போட்டி appeared first on Dinakaran.