×

சிஆர்பிஎப் வீரரை தாக்கிய 2 ேபர் கைது

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அடுத்த தளிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). சிஆர்பிஎப் வீரரான இவர், அரியானா மாநிலத்தில் உள்ள படை பிரிவில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, சொந்த ஊருக்கு ரமேஷ் வந்துள்ளார். கடந்த 15ம் தேதி, ரமேஷ் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த போது, சாலையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் டூவீலரில் அதிவேகமாக வந்தனர். அவர்களை ரமேஷ் தடுத்து நிறுத்தி, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதால், மெதுவாக டூவீலரை ஓட்டிச்செல்லுமாறு கூறினார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்கள், ரமேசை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து, பெரும்பாலை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, கோடல்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

The post சிஆர்பிஎப் வீரரை தாக்கிய 2 ேபர் கைது appeared first on Dinakaran.

Tags : CRPF ,Dharmapuri ,Ramesh ,Thillialli ,Perumbalai ,Dharmapuri district ,Aryana ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி