×

லாரி மீது டூவீலர் மோதி வாலிபர் பலி

கிருஷ்ணகிரி, ஜன.20: பர்கூர் ஒப்பதவாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (22), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம், கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி டூவீலரில் சென்றார். சூளகிரி தக்காளி மார்க்கெட் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் டிரைவர், எவ்வித சிக்னலையும் போடாமல் திடீரென லாரியை நிறுத்தினார். இதனால் லாரியின் பின்பகுதியில் முருகனின் டூவீலர் மோதியது. இதில் அவர் தவறி விழுந்து, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்து வந்த சூளகிரி போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி மீது டூவீலர் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Murugan ,Parkur Oppadavadi ,Hosur ,Chulagiri tomato market ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை