×

நாகர்கோவிலில் டாரஸ் லாரி மீது டெம்போ மோதி கோழிக்கடை உரிமையாளர் பலி

நாகர்கோவில், ஜன.20 : நாகர்கோவில் வடக்கு கோணம் அன்னம்மாள் தெருவை சேர்ந்தவர் அமுத வளன்(43). இவர் கோழிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் நெல்லை மாவட்டத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு, டெம்போவில் நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார். டெம்போவை நாகர்கோவில் அனந்தநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வின் (32) என்பவர் ஓட்டி வந்தார். அப்டா மார்க்கெட் அருகே நான்கு வழிச்சாலையில் வரும் போது, திடீரென டெம்போ கட்டுப்பாட்டை இழந்து, அந்த பகுதியில் நின்ற டாரஸ் லாரி மீது மோதியது. இதில் டெம்போவின் முன் பகுதியில் இருந்த அமுதவளன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அமுதவளன், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

The post நாகர்கோவிலில் டாரஸ் லாரி மீது டெம்போ மோதி கோழிக்கடை உரிமையாளர் பலி appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Tempo ,Amuta Valan ,Annammal Street, North Angle, Nagercoil ,Nellai district ,Ananthanadar ,Nagercoil Tempo ,Taurus ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...