×

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.6.500 ஓய்வூதியம் வழங்க வேண்டும்

திருவாரூர், ஜன.20: மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட அமைப்பாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ. 6 ஆயிரத்து 750 மற்றும் டிஏ வழங்க வேண்டும். மருத்துவப்படி மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும். ஈமச் சடங்கு நிதி ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு துறைகளில் இருந்து வரும் காலிப் பணியிடங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் பொறுப்பாளர்கள் அம்புஜம் காமராஜ், மாரியப்பன், நாகராஜன், இந்திராணி, சுப்பிரமணியன், சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.6.500 ஓய்வூதியம் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Satnav ,Anganwadi ,Thiruvarur ,Sathunav ,Anganwadi Employees Association ,Thiruvaroor ,Tamil Nadu Chaturthi and ,Anganwadi Pensioners' Association ,Sathinavu ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்