×

திருவாரூரில் ஆர்ப்பாட்டம் ெபாங்கலுக்கு மகன்கள் சாமி கும்பிட அழைக்காததால் விவசாயி விஷமருந்தி தற்கொலை

முத்துப்பேட்டை,ஜன.20: முத்துப்பேட்டை அருகேயுள்ள பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் பாலதண்டாயுதம்(63). விவசாயி. இவருக்கு யசோதா என்ற மனைவியும் திருமணமான ராம்குமார், ராஜ்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அருகில் வசிக்கும் மகன்கள் இருவரும் கடந்த 15ம் தேதி பொங்கலன்று ஒன்றாக சாமி கும்பிட தந்தை பாலதண்டாயுதையும் தாய் யசோதாவையும் அழைத்துள்ளனர்.அவர்கள் மீது கோபமாக இருந்த பாலதண்டாயுதம் போகவில்லை. ஆனால் மனைவி யசோதா மட்டும் சென்றுள்ளார். இதனால் தான் வரவில்லை என்றாலும் மீண்டும் அழைக்காமல் தன்னை விட்டுவிட்டு சாமி கும்பிட்டு விட்டார்களே என்று மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு பாலதண்டாயுதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராம்குமார் கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் பாலதண்டாயுதத்தின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாரூரில் ஆர்ப்பாட்டம் ெபாங்கலுக்கு மகன்கள் சாமி கும்பிட அழைக்காததால் விவசாயி விஷமருந்தி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Sami ,Muthuppet ,Balathandayutham ,Pethavelankottagam ,Muthupet ,Yashoda ,Ramkumar ,Rajkumar ,Pongal ,Thiruvarur ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...