- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மோடி
- கேஎஸ் ஆழகிரி அவேசம்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- கே.எஸ்.அழகிரி
- மோடி அரசு
- Kumbabhishekam
- அயோத்தி
- பிரதமர் மோடி
- கே.எஸ்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி அரசு, அதை மூடி மறைக்க வரும் 22ம் தேதி அயோத்தியில் கும்பாபிஷேகத்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட மோடி முனைப்பு காட்டுகிறார். நிறைவடையாத ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதை நான்கு சங்கராச்சாரியார்கள் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். சென்னை மாநகரில் கேலோ இளைஞர் விளையாட்டு போட்டியை தொடக்கி வைக்க பிரதமர் மோடி வருகை புரிந்திருக்கிறார். அதேநேரத்தில் ரங்கம், ராமநாதபுரம் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு அரசியல் ஆதாயத்தோடு மோடி செயல்பட்டு வருவது வெளிப்படையாக தெரிகிறது.
தமிழக மக்களை கடந்த ஒன்பதரை ஆண்டுகாலமாக வஞ்சித்து செயல்பட்டு வரும் பிரதமர் மோடியினுடைய ஆன்மீக சுற்றுப் பயணத்தின் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள். தமிழகம் என்றைக்குமே பாஜ எதிர்ப்பு பூமியாகவே இருந்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரியிருந்தார்கள். ஆனால், இதுவரை எந்த நிதியும் ஒதுக்காமல் ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. எனவே, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக மக்கள் மிகுந்த கொந்தளிப்பான நிலையில் இருந்து வருகிறார். இதை மூடி மறைக்கிற வகையில் பிரதமர் மோடியின் ஆன்மிக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் ஆதரவை திரட்டுகிற முயற்சியில் படுதோல்வி அடைவது உறுதி.
The post தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் பிரதமர் மோடி ஆன்மிக சுற்றுப்பயணம் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி ஆவேசம் appeared first on Dinakaran.