×

சிறுவர், சிறுமியர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டி

 

சிவகாசி, ஜன.20: திருத்தங்கல்லில் சிறுவர், சிறுமியர்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. திருத்தங்கல் பாண்டியன் நகரில் இந்திய அரசு நேரு யுவகேந்திரா மற்றும் திருத்தங்கல் வெள்ளைரோஜா நண்பர்கள் குழு இணைந்து 25ம் ஆண்டு சிறுவர், சிறுமிகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விஜய் ஆனந்த் வரவேற்றார். ஊஞ்சல், பல்லாங்குழி, பம்பரம், கோலிக்குண்டு, தண்ணீர் பந்து, உப்புமூட்டை சுமத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து பாட்டு போட்டி, கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிவகாசி மாநகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் சாமுவேல், சிவகாசி மாநகராட்சி மண்டல குழு தலைவர் குருசாமி தலைமை தாங்கி பரிசுகள், சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் வெள்ளை ரோஜா நண்பர்கள் குழு ஆரோக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post சிறுவர், சிறுமியர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Thirutangal ,competition ,Government of India ,Nehru Yuvakendra ,White Rose Friends Group ,Thiruthankal ,Pandyan Nagar ,
× RELATED முதியவரை தாக்கியவர்கள் மீது வழக்கு