×

‘தமிழ்நாடு பசுமை முதன்மையாளர்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஏப். 15ம் தேதி கடைசி நாள்

சென்னை: தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருதுக்கு வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் 3.9.2021 அன்று சட்டசபையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ”பசுமை முதன்மையாளர் விருது” வழங்கப்படும் என அறிவித்தார்.

2021-22ம் ஆண்டு முதல் ரூ.1 கோடி செலவில் விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நிறுவனம், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்பு, தொழிற்சாலைகளுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் 2023-24ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுகளை நிறுவனம், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்பு, தொழிற்சாலைகளுக்கு வழங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு முன்மாதிரியான பங்களிப்பை பின்வரும் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்.

அதாவது, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய புதுமையான பசுமை தயாரிப்புகள்/பசுமை தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள், நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் தணிப்பு, உமிழ்வு குறைப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்றவை, சுற்றுச்சூழல் தொடர்பான பிற திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இந்த விருதுக்கு நிரப்பப்பட வேண்டிய விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், சென்னை மாவட்டத்தை தொடர்பு கொள்ளவும். பசுமை முதன்மையாளர் விருது 2023க்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்டத்துக்கு சமர்ப்பிக்க கடைசி தேதி ஏப்.15ம் தேதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ‘தமிழ்நாடு பசுமை முதன்மையாளர்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஏப். 15ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai District Collector's Office ,Tamil Nadu Environment ,Climate Change ,Minister ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...