×

வாக்குச் சீட்டை பயன்படுத்த ஏன் தயக்கம்: பாஜவுக்கு பஞ்சாப் முதல்வர் கேள்வி

பனாஜி: மோடி அலை மீது நம்பிக்கை இருந்தால் வாக்குச் சீட்டை பயன்படுத்த பாஜ அரசு ஏன் தயங்குகிறது என பஞ்சாப் முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார். கோவா சென்றுள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், அங்கு தெற்கு கோவாவில் உள்ள புனாவுலிம் தொகுதியில் நடந்த பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசிய போது, ‘’ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக எந்த கட்சி பேசினாலும் அதற்கு ஆதரவாக பாஜ வரிந்து கட்டி கொண்டு பேசுகிறது.

பிரதமர் மோடி அலை மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், மின்னணு இயந்திரத்துக்கு ஆதரவாக ஏன் பேச வேண்டும்? காரணமின்றி அதற்கு ஆதரவளிக்க தேவையில்லையே? தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டை பயன்படுத்த பாஜ அரசு ஏன் தயங்குகிறது என கேள்வி எழுப்பி உள்ளார்.

The post வாக்குச் சீட்டை பயன்படுத்த ஏன் தயக்கம்: பாஜவுக்கு பஞ்சாப் முதல்வர் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Punjab ,BJP ,Chief Minister ,BJP government ,Modi wave ,Bhagwant Singh Mann ,Goa ,South Goa ,CM ,Dinakaran ,
× RELATED 400 தொகுதி என்பது பொய் கோஷம் அடுத்து...