×

வள்ளியூர் அருகே சுவாரசியம்: மனைவியை தூக்கிக்கொண்டு கணவன் ஓடும் போட்டி

வள்ளியூர்: வள்ளியூர் அருகே அம்மச்சி கோவில் கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில் மனைவியை தூக்கிக் கொண்டு கணவன் ஓடும் போட்டி நடந்தது. நெல்லை மாவட்டம், வள்ளியூர் அடுத்த அம்மச்சிகோவில் கிராமத்தில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் அனைத்துத்தரப்பினருக்கும் நடனம், உரல் தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதேபோல் மனைவியை கணவன் தூக்கிக்கொண்டு குறிப்பிட்ட தூரம் உள்ள இலக்கை அடையும் வகையில் ஓட வேண்டும் என்ற போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆர்வத்துடன் பலர் பங்கேற்ற நிலையில் மனைவியை தூக்கிக் கொண்டு ஓடிய ஒருவர், சிறிதுநேரத்தில் தூக்க முடியாமல் தடுமாறினார்.இதனால் கணவனும், மனைவியும் கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

The post வள்ளியூர் அருகே சுவாரசியம்: மனைவியை தூக்கிக்கொண்டு கணவன் ஓடும் போட்டி appeared first on Dinakaran.

Tags : Valliyur ,Pongal festival ,Ammachi Kovil ,Ammachikovil ,Nellai district ,
× RELATED இருதரப்பு மோதலில் 2 வாலிபர்கள் கைது