×

புதுவையில் பரபரப்பு மத்திய குழுவுடன் வந்த அதிகாரியை தாக்கிய விவசாயிகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளுக்கு மத்தியக்குழு சென்று மழைவெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தது. பாகூரில் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை பார்வையிட குழுவினர் சென்றனர். பாகூர் பரிக்கல்பட்டு சாலையில் சேதமான விளைநிலங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அப்போது பாகூர் பகுதி விவசாயிகள், ஒன்றிய குழுவினரிடம் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். அப்போது, ஒன்றிய குழுவுடன் வந்திருந்த வேளாண் துறை இயக்குநர் பாலகாந்தி, விவசாயிகளை சமாதானப்படுத்த முயன்றார். இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள், மழை வெள்ளத்தால் தத்தளித்தபோது நீங்கள் எங்கே போனீர்கள்? எங்களை எட்டிக்கூட பார்க்கவில்லை. இப்போது மத்திய குழுவினருடன் நாடகம் நடத்த வந்தீர்களா? என சரமாரி கேள்வி எழுப்பி கோஷமிட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் சட்டையை பிடித்து தள்ளி விரட்டியடித்தனர். சுதாரித்துக் கொண்ட இயக்குநர் பாலகாந்தி, பக்கத்தில் இருந்த கார் மீது சாய்ந்து சேற்றில் விழாமல் தப்பினார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விவசாயிகளை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்….

The post புதுவையில் பரபரப்பு மத்திய குழுவுடன் வந்த அதிகாரியை தாக்கிய விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Central Committee ,Puducherry ,Bagoor ,Dinakaran ,
× RELATED வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி