×

சிராவயல் மஞ்சுவிரட்டில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது

சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. 11 வயது சிறுவன், மணிமுத்து குடும்பத்தினரிடம் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். கடந்த 17ல் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி 11 வயது சிறுவன், மணிமுத்து ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுவன், மணிமுத்து குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். 2 பேரின் குடும்பத்துக்கும் தனது சார்பிலும் தலா ரூ.1 லட்சம் நிதியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார் .

The post சிராவயல் மஞ்சுவிரட்டில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Chiravayal Manjuvirat ,Sivagangai ,Chiravayal Manchu Virat ,Manimuthu ,Minister ,Periyakaruppan ,Manjuratu ,Chiravayal ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்