×

ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு: திருச்சி மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். ஜல் ஜீவன் திட்ட குடிநீர் இணைப்புகளுக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு தருவதாக நாவல்பட்டு ஊராட்சி தலைவர் ஜேம்ஸ் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அதில், திருச்சி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்; திருச்சி ஆட்சியர் விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி.23க்கு ஒத்திவைத்தது. மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

The post ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு: திருச்சி மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jal ,Eicourt Madurai Branch ,Trichy District Ruler ,Madurai ,Icourt Madurai branch ,Jal Jeevan ,Peryasamy ,Madurai Branch ,Court ,Jal Jeevan Project ,Dinakaran ,
× RELATED ஜல் ஜீவன் சக்தி அபியான் திட்டத்தில்...