×

தென், டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு.. நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல்!!

சென்னை: தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும், நாளையும் தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

உறைபனி எச்சரிக்கை:
இன்றும் மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

The post தென், டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு.. நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : South ,Delta ,Chennai Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Center ,southeast Arabian Sea ,Southeastern ,Nilgiris ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 5...