×

தென்காசி சங்கரன்கோவில் மலர்ச்சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.5,000-க்கு விற்பனை

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர்ச்சந்தையில் ஒருகிலோ மல்லிகைப் பூ ரூ.5,000-க்கு விற்பனை ஆகிறது. மழை, பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.3,500-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ மல்லிகைப் பூ தற்போது ரூ.5,000-க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ பிச்சிப் பூ ரூ.1,250-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், அரளி ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post தென்காசி சங்கரன்கோவில் மலர்ச்சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.5,000-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tenkasi Sankarankoil ,Tenkasi ,Sankarankoil ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...