×

விபத்து பீதியால் தரையிறக்கப்பட்டவை ஆபத்து விமானத்தில் பயணித்த அமைச்சர்

புதுடெல்லி: எத்தியோப்பியாவில் கடந்த 2019ம் ஆண்டு, மார்ச் 10ம் தேதி, ‘போயிங் 737 மேக்ஸ்’ விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 4 இந்தியர்கள் உட்பட மொத்தம் 157 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து, அந்த விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில்,‘ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்’ மட்டுமே இந்த ரக விமானங்களை இயக்கி வந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த விமானங்களின் மென்பொருளில் மாற்றங்கள் செய்து, பாதுகாப்பான பயணத்துக்கு உறுதி அளித்தது. இதனால், இந்த விமானங்களை இயக்குவதற்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், டெல்லி -குவாலியர் இடையே இந்த விமானத்தை முதல் முறையாக ஸ்பைஸ்ஜெட் நேற்று இயக்கியது. இதில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா் பயணம் செய்தார். …

The post விபத்து பீதியால் தரையிறக்கப்பட்டவை ஆபத்து விமானத்தில் பயணித்த அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Ethiopia ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...