×

விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் இன்று காலை தொடங்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தம்!

புதுக்கோட்டை: விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் இன்று காலை தொடங்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள், கோட்டாட்சியர் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க விழா கமிட்டியினர் அறிவுறுத்தியுள்ளனர். விழா கமிட்டியினர் சிலர் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தபின் காளைகளை அவிழ்க்க வேண்டும் என கூறினர். வாக்குவாதம் காரணமாக மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டி அரைமணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

The post விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் இன்று காலை தொடங்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தம்! appeared first on Dinakaran.

Tags : jallikattu ,Mandaiyur ,Viralimalai ,Pudukottai ,DMK ,AIADMK ,Minister ,Vijayabaskar ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா