×

தொட்டியம் வட்டத்தில் நாளை நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 

திருச்சி. ஜன.19:திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோர்களுக்கு சிலிண்டா் வழங்குவதில் காணப்படும் கால தாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலா் அபிராமி தலைமையில் தொட்டியம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன மேலாளா்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளா்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகா்வோர் குறைதீர்க்கும் கூட்டம், திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், தாசில்தார் அலுவலகத்தில் வரும் ஜன.20ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் தொட்டியம் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகா்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் தொட்டியம் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகா்வோர்கள், அங்கீகாிக்கப்பட்ட தன்னார்வ நுகா்வோர் அமைப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடா்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

The post தொட்டியம் வட்டத்தில் நாளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tankiyam ,Trichy ,Trichy District ,Collector ,Pradeep Kumar ,District ,Revenue Officer ,Abirami ,
× RELATED தொட்டியத்தில் சூறாவளி காற்றுடன் மழை; 1 லட்சம் வாழை மரங்கள் முறிந்து நாசம்