- வாக்காளர் தினம்
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை
- வாக்காளர் தினம் வினாடி
- இந்திய தேர்தல் ஆணையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுக்கோட்டை
புதுக்கோட்டை, ஜன.19: வாக்காளர் தின வினாடி, வினா போட்டியில் பங்கேற்கலாம். இதற்கான பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும். இதற்கான பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும். இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு திட்டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி வரும் 21ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் 11.15 வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள் இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். “http://www.erolls.tn.gov.in/Quiz2024”. இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் இன்று (19ம்தேதி) வரை பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.
இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். ‘இந்தியாவின் தேர்தல்கள்” என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மாநில உதவி மைய எண் 1800-4252-1950 மற்றும் மாவட்ட உதவி மைய எண் 1950 என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டையில் வாக்காளர் தின வினாடி, வினா போட்டியில் பங்கேற்கலாம் appeared first on Dinakaran.