- அரியலூர்
- பாலன்
- அகமரி கிராமம்
- திருப்பத்தூர் வட்டம்
- சிவகங்கை மாவட்டம்
- அரியலூர் ஜெயலலிதா நகர்,
- பெரம்பலூர்
அரியலூர், ஜன.19: அரியலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், அதிகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (31). இவர் அரியலூர் ஜெயலலிதா நகரில் தங்கி, பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் பகுதியிலுள்ள ஒரு ஹாலோ பிளாக் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இவர், அரியலூரில் இருந்து அல்லிநகரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றார்.
பெரம்பலூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த அவர் தனியார் மண்டபம் அருகே , முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது எதிரே பெரம்பலூரில் இருந்து அரியலூரில் நோக்கி வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . இது குறித்து தகவலறிந்து வந்த கயர்லாபாத் காவல் துறையினர் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
The post அதிவேகம் உயிரை பறித்தது பைக்கில் லாரியை முந்த முயன்ற இளைஞர் பேருந்து மோதி பலி appeared first on Dinakaran.