×

பெண்ணிடம் பாலியல் சீண்டல் ஈடுபட முயற்சி ஆட்டோ டிரைவர் கைது திருவண்ணாமலையில் ஆட்டோவில் பயணம் செய்த

திருவண்ணாமலை, ஜன.19: திருவண்ணாமலையில் ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள குன்றக்குடி அடிகளார் நகரை சேர்ந்தவர் 37வயது மதிக்கத்தக்க இளம்பெண். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். எனவே, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் இவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு 9 மணியளவில் வழக்கம் போல மளிகை கடையில் வேலையை முடித்துவிட்டு, இளம்பெண் தனது வீட்டுக்கு மத்தளாங்குளத் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்ேபாது, அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் ஜானகிராமன் வேட்டவலம் சாலை வழியாக செல்வதாக கூறி இளம்பெண்ணை ஆட்டோவில் வருமாறு அழைத்துள்ளார். தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்தபோதும், அந்த வழியாக சவாரிக்கு செல்வதாகவும் எனவே பணம் வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். எனவே அந்த ஆட்டோவில் இளம்பெண் பயணித்துள்ளார். கீழ்நாத்தூர் சாலை வழியாக ஆட்டோ சென்றபோது அவர் மீது கை வைத்து ஆட்டோ டிரைவர் அத்துமீறி நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அந்த ஆட்ேடாவில் இருந்து திடீரென கீழே குதித்து தப்பியுள்ளார். இதுதொடர்பாக, நேற்று முன்தினம் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து, சோமாசிபாடி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜானகிராமனை கைது செய்தனர்.

The post பெண்ணிடம் பாலியல் சீண்டல் ஈடுபட முயற்சி ஆட்டோ டிரைவர் கைது திருவண்ணாமலையில் ஆட்டோவில் பயணம் செய்த appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,Kunrakkudi Adikalar ,Tiruvannamalai Vettavalam Road ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...