×

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் மூத்த முன்னோடியான ஆற்காடு வீராசாமி தொடர்ந்து கலைஞரின் நிழலாகவே இருந்து வந்துள்ளார். பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். 3 முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே வயது மூப்பின் காரணமாக ஆற்காடு வீராசாமி, அண்ணாநகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஆற்காடு வீராசாமியின் மகனும் வடசென்னை எம்பியுமான கலாநிதி வீராசாமி, டாக்டர் என்பதால் அவரே தந்தையை கவனித்துக் கொள்கிறார். இந்நிலையில் திடீரென நேற்று அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister ,Arkadu Veerasamy ,Chennai ,Arkadu Veerasamy Hospital ,
× RELATED ஆற்காடு வீராசாமி பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து