- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருமாவளவன்
- யூனியன் அரசு
- சென்னை
- விடுதலை புலிகள் கட்சி
- இலங்கை கடற்படை
- கொட்டாபட்டினம்
- புதுக்கோட்டை மாவட்டம்
- நாகப்பட்டினம்
- தின மலர்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து சென்ற மீனவர்கள் 10 பேரையும் விசைப்படகையும் 15ம் தேதி கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.
15ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 18 பேரையும், விசைப்படகுகளையும் 16ம் தேதி கைது செய்துள்ளனர். நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களை தடுத்து நிறுத்திடவும், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை appeared first on Dinakaran.