×

பிரதமர் வருகையால் எடப்பாடி பொதுக்கூட்டம் வரும் 31ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: பிரதமர் மோடி சென்னை வர உள்ளதால் இன்று ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டம் வரும் 31ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இன்று (19ம் தேதி), 20, 21ம் தேதி மற்றும் 27, 28 ஆகிய 5 நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னையில் ‘கேலோ’ இந்தியா விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைக்கிறார். இதனால் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி கூட்டம் வருகிற 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.

The post பிரதமர் வருகையால் எடப்பாடி பொதுக்கூட்டம் வரும் 31ம் தேதிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Edappadi General Meeting ,Chennai ,Modi ,K. ,Edappadi Palanisami ,MGR ,Archbishop ,Dinakaran ,
× RELATED முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய...