வாஷிங்டன்: ஆல்பபெட் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தில் ஆட்குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார். ஆல்பபெட் நிறுவனத்தில் பல ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் முன்னறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிச் சுமைகளை குறைக்க செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
The post ஆல்பபெட் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும்: கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தகவல் appeared first on Dinakaran.