×

தமிழக மணல் குவாரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு..!!

டெல்லி: தமிழக மணல் குவாரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சம்மனுக்கு சென்னை ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மணல் குவாரிகளில் அளவுக்கதிகமாக மணல் அள்ளி விற்பனை செய்த புகாரில் ED சோதனை நடத்தியது. மணல்குவாரி உரிமையாளர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வீடுகளில் ED சோதனை செய்தது.

The post தமிழக மணல் குவாரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tamil Nadu ,Delhi ,Enforcement Department ,Summon ,Chennai ICourt ,Enforcement Department Summon ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...