×

தடுப்புச்சுவரை இடித்து அந்தரத்தில் தொங்கிய அரசு பஸ் : குமுளி அருகே பரபரப்பு

கூடலூர் : குமுளி அருகே சாலையில் தடுப்புச்சுவரை இடித்து கேரள அரசு பஸ் அந்தரத்தில் தொங்கியபடி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக எல்லை குமுளியிலிருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு நேற்று கேரள அரசு பஸ் 43 பயணிகளுடன் சென்றது. இந்த பஸ் குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாறு தேசிய நெடுஞ்சாலையில் 56வது மைல் பகுதியில் ஐயப்பா கல்லூரி அருகே சென்றது.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து பஸ்சில் இருந்த பயணிகளை வெளியேற்றினர். இதனால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பஸ் விபத்திற்குள்ளான இடத்தில் சாலையின் தடுப்புச்சுவரின் கீழ் வீடு ஒன்று இருந்தது. பஸ் பள்ளத்தில் கவிழாமல் நின்றதால் வீடும், அந்த வீட்டிலிருந்தவர்களும் தப்பித்தனர்.

The post தடுப்புச்சுவரை இடித்து அந்தரத்தில் தொங்கிய அரசு பஸ் : குமுளி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Govt ,Kumuli ,Kudalur ,Kerala government ,Tamil Nadu ,Kollam ,Kerala ,
× RELATED பெரியாறு புலிகள்...