சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் வடலூரில் அமைத்த சத்திய ஞான சபை பெருவெளியின் அமைப்பை சிதைத்து விடக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அங்கு வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைப்பது வரவேற்கப்பட வேண்டிய திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், வள்ளலார் சர்வதேச மையத்தை பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியில் அமைப்பதைத் தான் வள்ளலாரை பின்பற்றுபவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.வள்ளலார் சத்திய ஞான சபையில் உள்ள பெருவெளி, பக்தர்கள் கூடுவதற்கான பொதுவெளியாகவே தொடர வேண்டும். சத்திய ஞானசபைக்கு எதிரில் நிலக்கரி சுரங்கம் மூடப்பட்ட நிலம், கடலூர், கும்பகோணம், சேத்தியாத் தோப்பு, விருத்தாசலம் சாலை ஆகிய இடங்களில் வள்ளலார் சர்வதேச மையத்தை கூடுதல் வசதிகளுடன், கூடுதல் பரப்பில் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
The post வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.