×

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நிலை குழுவுக்கு திமுக கடிதம்..!!

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நிலை குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய, மாநில உறவை மட்டுமின்றி, ஒன்றியத்திற்கே பாதகமான விளைவுகளை இத்திட்டம் ஏற்படுத்தும். அதிகாரவரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக்குழு, அதிகாரப் பசி கொண்ட ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகாமல் விசாரணையை நிறுத்த வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றிற்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நடைமுறையை மிக கடுமையாக எதிர்க்கிறது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நிலை குழுவுக்கு திமுக கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,CHENNAI ,Union ,Dinakaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்