×

பெரம்பலூர் அருகே பரபரப்பு; தனியார் பள்ளி கழிவறை இடித்து கொடிக்கம்பம்: பாஜ மாவட்ட தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது


பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தில் ஆர்சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜேசிபி எந்திரம் மூலம் மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் அகஸ்டின் மற்றும் பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலத்தின் பங்கு குருவான, பெரம்பலூர் வட்டார முதன்மை குரு ராஜமாணிக்கம் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகங்களில் புகார் தெரிவித்திருந்தனர். அமைதியாக இயங்கி வரும் பள்ளி வளாகத்தில் தங்களுக்கு இடம் வேண்டுமென பள்ளிக்கு சொந்தமான இடத்தில் உள்ள கழிவறைகளை சில மர்ம நபர்கள் இடித்து அகற்றி உள்ளனர் என புகார் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று கழிவறை இடிக்கப்பட்ட பகுதியில் பாஜ கொடி ஏற்றப்பட்டதால் திடீர் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மங்கலமேடு டிஎஸ்பி சீராளன் உத்தரவின் பேரில், வி.களத்தூர் போலீசார் நேற்று நள்ளிரவு வாலிகண்டபுரம் கிராமத்திற்கு சென்று பாஜ மாவட்ட தலைவரான செல்வராஜை கைது செய்தனர். மேலும் மரவநத்தம் கிராமத்தை சேர்ந்த பாஜ கிளை நிர்வாகிகளான சுரேஷ், மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் விசாரணைக்காக வி.களத்தூர் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். இச்சம்பவம் வேப்பந்தட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பெரம்பலூர் அருகே பரபரப்பு; தனியார் பள்ளி கழிவறை இடித்து கொடிக்கம்பம்: பாஜ மாவட்ட தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bustle ,Perambalur ,Kodigampam ,BJP district ,president ,RC Middle School ,Maravanantham ,V. Kalathur, Perambalur district ,JCP ,Kodikampam ,Dinakaran ,
× RELATED கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 400 மது பாட்டில்கள் பறிமுதல்