×

திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘தலைசிறந்த தமிழ் புலவரை நினைவுகூறும் வகையில் நாம் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள ஆழமான ஞானம் நமது வாழ்வின் பல்வேறு அம்சங்களில் நம்மை வழிகாட்டுகிறது. அவரது போதனைகள் சமுதாயத்தை நல்லொழுக்கம் மற்றும் ஒருமைப்பாட்டின் மீது கவனம் செலுத்துவதற்கு ஊக்குவிக்கவும், நல்லிணக்கம் உலகத்தை வளர்ப்பதற்கும் உதவுகின்றது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களை தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிபாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Modi ,Thiruvalluvar Day ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...