×

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதிக் கோட்பாட்டை வழிகாட்டியவர் வள்ளுவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: 133 அடியில் சிலை, கோட்டம் அமைத்து போற்றும் குறளோவிய தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள X தள பதிவில்; தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும், அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி! என்று பதிவிட்டுள்ளார்.

 

The post பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதிக் கோட்பாட்டை வழிகாட்டியவர் வள்ளுவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Valluvar ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Valluva ,Tamil Nadu ,K. Stalin ,MLA. K. ,STALIN ,AMILTAMIL ,Valluwar ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...