×

தனிப்பெரும் கட்சியானாலும் பாஜவை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க முடியும்: சசிதரூர் பேச்சு

கோழிக்கோடு: ‘வரும் மக்களவை தேர்தலில் பாஜ தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறலாம். ஆனாலும் ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு வெற்றி எண்ணிக்கையை தடுக்க முடியும்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறி உள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த கேரள இலக்கிய விழாவில் பங்கேற்ற திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் பேசியதாவது:
வரும் மக்களவை தேர்தலில் பாஜ தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை அவர்கள் பெறாமல் தடுக்க முடியும். பாஜ மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. அவர்கள் எங்களுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளன.

எனவே, அவர்களை இந்தியா கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளை நாங்கள் செய்வோம். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. எனவே இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டை பொறுத்த வரையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே ஒரே கூட்டணியில் உள்ளன. இதனால் தொகுதி பங்கீட்டில் பிரச்னை எழாது. இதுவே கேரளாவில் அதே நிலை இல்லை. எனவே சில மாநிலங்களில் பாஜவுக்கு எதிராக ஒரே வேட்பாளரை ஒருங்கிணைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தனிப்பெரும் கட்சியானாலும் பாஜவை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க முடியும்: சசிதரூர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Sasitharur ,Kozhikode ,Lok Sabha ,Congress ,Kerala ,Kozhikode, Kerala ,Dinakaran ,
× RELATED கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில்...