×

அரசுப்பள்ளி கட்ட நிலம் தானம் டியரசு தின விழாவில் யி அம்மாளுக்கு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளி கட்டிடத்துக்கு தன்னுடைய நிலத்தை தானமாக தந்த ஆயி அம்மாளுக்கு குடியரசு தினவிழாவில் விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம்.

ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாக மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும்.

 

The post அரசுப்பள்ளி கட்ட நிலம் தானம் டியரசு தின விழாவில் யி அம்மாளுக்கு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Yi Ammal ,Donation of Government School Land Donation Day Ceremony ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Aai Ammal ,Republic Day ,Diarasu Day ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...