×

வாலிபரை தாக்கி வழிப்பறி: 2 பேர் கைது


பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (49). இவர் கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து எம்கேபி. நகர் சஞ்சய் நகர் பார்க் அருகே நின்றிருந்தபோது இரண்டு பேர் வந்து மது அருந்த பணம் கேட்டுள்ளனர். அதற்கு வெங்கடேசன் பணம் இல்லை என்று கூறவே ஆத்திரம் அடைந்த அவர்கள், வெங்கடேசனை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதுடன் அவரிடம் இருந்த 4 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.

இதில் காயம் அடைந்த வெங்கடேசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் விசாரித்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்த பாரத் சஞ்சய் (எ) நாட்டாமை (21), தனுஷ் (19) ஆகியோரை கைது
செய்தனர்

The post வாலிபரை தாக்கி வழிப்பறி: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Venkatesan ,Viasarpadi Sundaram Power Line ,Chennai ,MKB ,Nagar ,Sanjay Nagar Park ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு